தனக்கு வந்த ஆபத்தை நாட்டுக்கு வந்ததாக மாற்றிய இந்திரா கொண்டு வந்த அவசர நிலை எதிர்காலத்தில் வருமா?

Share

தேர்தல் முறைகேடு காரணமாக அதாவது தேர்தல் பணியில் அரசு அதிகாரியை ஈடு படுத்தியதால் தேர்தல் செல்லாது என்று அறிவிக்கப் பட்ட இந்திரா உச்ச நீதிமன்றத்தில் தடை கிடைக்காததால் அவசர நிலையை பிரகடன படுத்தி பதவியில் நீடித்தார்.
      சட்டத்திற்கு புறம்பான கட்டளை களுக்கு பணியாதீர் என்று ஜெயப்ரகாஷ் நாராயணன் முழுப் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்.
      இன்று ஜெயலலிதா தனக்கு வந்த பதவி இழப்பு சதியால் என்று கூறுகிறார்.   சொத்து  வாங்க குவிக்க சொல்லி யார் சதி செய்தார்கள்.
        தானே தனக்கு குழி வெட்டிக் கொண்டு பழியை பிறர மீது சுமத்துவது என்ன நியாயம்?
         அவசர நிலை பிரச்சினை மத்தியில்  ஆளுபவர்கள் மட்டும் சம்பத்தப் பட்டது அல்ல.   ஆட்சியில் இருக்கும் எல்லோருக்கும் அது பொருந்தும்.
       எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மக்கள்தான்.
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

This website uses cookies.