தொடக்கப் பள்ளி என்பது பெரும்பாலும் தனியார் வசம இருக்கும் ஒரு வணிக மையமாகவே மாறி இருக்கிறது

Share
வீட்டுக் கல்வி முறையை ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகல்வி துறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களை செய்தால் தற்போது நிலவும்  பல பிரச்சினைகளை சமாளித்து விடலாம்.
அது, ஐந்தாவது எட்டாவது வகுப்புகளில் அரசு பொது தேர்வு  நடத்தி அதில் பங்கு பெற வீட்டுக் கல்வி பெற்ற மாணவர்களை அனுமதிப்பதுதான் தற்போது பத்து மற்றும் பனிரெண்டாவது வகுப்புகளுக்கு மட்டுமே அரசு பொது தேர்வு நடத்தி வருகிறது.
எந்த பொது  தேர்வு வரை வீட்டுக் கல்வி பெற்ற மாணவர்களை அனுமதிப்பது என்பதை ஆய்வு நடத்தியும் பொது  மக்கள் கருத்து கேட்டும் அரசு மேற்கொள்ள வேண்டிய கொள்கை முடிவுகள்.
முந்தைய காலத்தில் வீட்டுக் கல்வி பெற்றவர்களை தேர்வு வைத்து ஆறாம் வகுப்பில் சேர்த்துக்  கொள்ளும் முறை இருந்தது.
அந்த முறையை ஏன் கை விட்டார்கள் என்பது ஆராயப் பட வேண்டிய ஒன்று.
இன்றைக்கு தொடக்கப் பள்ளி என்பது பெரும்பாலும் தனியார் வசம இருக்கும் ஒரு வணிக மையமாகவே மாறிஇருக்கிறது.
மெட்ரிகுலேஷன் , ஓரியண்டல் ,ஆங்கிலோ-இந்திய முறைகள் ஒழிக்கப் பட்டு சமச்சீர்கல்வி அமுலுக்கு வந்தும் இன்னும் பாகுபாடுகள் அகன்ற பாடில்லை.
எட்டாம் வகுப்பு வரை எல்லாப் பாடத்திலும் போது அறிவு எட்ட வகை செய்யும் முறையில்தான் நமது பாடத் திட்டங்கள் இருக்கின்றன.
பெரும்பாலான குடும்பங்களில் படித்து விட்டு வீட்டோடு இருப்பவர்கள் தங்கள் குடும்பத்து பிள்ளைகளுக்கு அரசு வகுத்து கொடுக்கும் பாட திட்டத்தை வீட்டிலேயே சொல்லிக் கொடுத்து போது தேர்வுக்கு தயார் செய்ய முடிந்தால் அனுமதிப்பதில் தவறு என்ன?
அப்படி படித்தவர்கள் இல்லாத பத்து குடும்பங்கள் ஒன்று சேர்ந்து அவர்களின் குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியரை அமர்த்தி சொல்லிக் கொடுக்க  செய்து அவர்களை பொதுத் தேர்வில் அனுமதித்தால் என்ன தவறு?
எல் கே ஜி , யு கே ஜி  வகுப்புகளில் சேர்க்க பெற்றோர் படும் துன்பத்தை மனதில் கொண்டால், அத்தகைய பள்ளிகள் விதிக்கும் கட்டணங்களை ஏற்க இயலாத பெற்றோர் படும் இன்னல்களை கருத்தில் கொண்டால் பள்ளிக் கல்வியில் வீட்டுக் கல்வியை இணைக்கும் அவசியம் புரியும்
இப்போதிருக்கும் நிலையை அப்படியே விட்டு விட்டு ஐந்தாவது எட்டாவது வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்தி அதில் வீட்டுக் கல்வி மாணவர்களை அனுமதிப்பது என்பது மிகப் பெரிய சூழ்நிலை மாற்றத்தை உருவாக்கும்.
பாடத் திட்டங்கள் அப்படியே இருக்கும். இதில் கட்டாயத் தன்மை என்பதும் இல்லை.
நான் வீட்டுக் கல்வியில்  ஐந்தாம் வகுப்பு வரை படித்து ஆசிரியரின் சான்றுடன் தேர்வு எழுதி ஆறாம் வகுப்பில் சேர்ந்தவன்.
கல்வி நிறுவனங்களின் முக்கியத்து வத்தை இது எந்த வகையிலும் குறைக்காது. தவிரவும் ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே எந்த மாணவரும் ஆழமான அறிவைப் பெற முடியும்.
ஒரு பத்து சதம் மாணவர்கள் பயனடைந்தால் பெரிதுதானே ?
மொத்தத்தில் தொடக்க கல்வியில் வீட்டுக் கல்வியை அனுமதித்து அரசு மற்றும் பெற்றோரது சுமைகளை குறைக்கும் வழிகளை ஆராய்வோமாக !


வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
+91-91766-46041


This website uses cookies.