வேளாண்மை

விவசாயிகள் கடன் ரூ 4 கோடியை வங்கியில் செலுத்திய அமிதாப் பச்சன் !!

Share

விளம்பரத்திற்காக நன்கொடை கொடுப்போர்கள் மத்தியில் ஓசைப் படாமல் உத்தர பிரதேச மாநில விவசாயிகள் 1398 பேர் வாங்கியிருந்த ரூபாய் 4 கோடி வேளாண் கடனை அந்த வங்கிகளில் செலுத்தி இருக்கிறார் அமிதாப் பச்சன்.

இதற்கு முன்பு மராட்டிய மாநில விவசாயிகள் 350 பேர் வாங்கி இருந்த வேளாண் கடன்களை வங்கிகளில் செலுத்தி அவர்களை தற்கொலை முடிவில்  இருந்து மீட்டிருக்கிறார்.

மராட்டியத்திலும் உபி-யிலும் விவசாயிகள் வேளாண் கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகி வருகிறது.

உத்தர பிரதேச விவசாயிகளை மும்பைக்கு வரவழைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்திருக்கிறார்.

காந்திஜி சொன்னார் பணக்காரர்கள் கையில் இருக்கும் பணம் ஏழைகளுக்கானது என்று.

எல்லா பணக்காரர்களும் சமுதாய நோக்க உள்ளவர்களாக இருந்தால் பணக்கார்கள் மீது யாருக்கும் கோபம் வராது. தேவை ஏற்படும்போது கொடுக்கப்  போகிறார்கள்.   யாரிடம் இருந்தால் என்ன?

அமிதாப் அரசியலில் இல்லை. அவரது மனைவி சமாஜ்வாதி கட்சியீன் சார்பில் பாராளுமன்ற மேலவைக்கு தேர்தெடுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் தீவிர அரசியலில் இல்லை.

இங்கேயும் கொடுக்கிறார்கள். அதில் அரசியல் இருக்கும். அரசியல் இல்லாமல் கொடுப்போரும் இருக்கிறார்கள் .

நம்மூர் நடிகர்களுக்கு மட்டுமல்ல எந்த வகையிலோ சொத்து சேர்த்து வைத்திருப்போர் மனதில் இந்த நற்சிந்தனை வளர்ந்தால் நல்லது.

This website uses cookies.