வணிகம்

9 நிமிட மின்சார நிறுத்தம் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்புவோம்?

Share

ஆனாலும் சிலர் அச்சமூட்டு கின்றனர். அதாவது திடீர் என்று மின்சார தேவை குறையும்போது அதனால் மின் விநியோக சாதனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சிலர் கூறுகின்றனர்.

அதுவும் மராட்டிய மின்துறை அமைச்சர் நிதின் ராவத் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகிறார். இதே கருத்தை சசிதரூரும் ஜய்ராம் ரமேஷும் வெளியிட்டுள்ளனர் .

எல்லா நல்லபடியாக நடக்கும் என்று அமைச்சர் தங்கமணி இன்று நம்பிக்கை தருகிறார்.

ஆனால் மக்கள் இந்த மின்சார நிறுத்தத்தை  கடைபிடிக்க வில்லை என்றால் ஒரு பிரச்னையும் ஏற்படாது.

ஆனாலும் கட்சி  பாகுபாடு பார்க்காமல் எல்லாரும் விளக்கை அணைப்பார்கள் என்றுதான் எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள்.

அதற்குள் சிலர் இந்த ஒன்பது நிமிட ஒளியணைத்தல் மற்றும் ஒளி பாய்ச்சுதல் ஆகியவற்றால் ஏற்படும் நன்மைகளை விஞ்ஞான ரீதியாக விவரிக்க தொடங்கி விட்டார்கள்.

அதைத்தான் விளங்கிக் கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ முடியவில்லை.

பார்க்கலாம் என்ன நடக்கிறது  இன்று என்று?

This website uses cookies.