Connect with us

நரேந்திர மோடி என்ன சாதி என்ற விவாதம் எதற்கு??! தூண்டியது யார்??

modi

இந்திய அரசியல்

நரேந்திர மோடி என்ன சாதி என்ற விவாதம் எதற்கு??! தூண்டியது யார்??

முதல் முதலில் தன்னை ஒரு தேநீர் விற்பனையாளர் என்று பெருமையுடன் கூறிக்கொண்டவர் நரேந்திர மோடி.

முதல் முதலில் தன்னை ஒரு தேநீர் விற்பனையாளர் என்று பெருமையுடன் கூறிக்கொண்டவர் நரேந்திர மோடி.

பொதுவாக அவர் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவராக தான் பார்க்கப்படுகிறார். உண்மை என்ன?

அவர் ‘ காஞ்சி ‘ ‘Ghanchi ‘ என்ற வியாபாரிகளின் வகுப்பை சேர்ந்தவர். எண்ணெய் மற்றும் தானியங்கள் விற்பவர்கள் என்று பெயர். அவரது வகுப்பு முன்பு முற்பட்ட வகுப்பில் தான் இருந்திருக்கிறது. 

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 1999ல் தான் மோடியின் சாதி பிற்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. 

பொதுவாகவே வட மாநில மக்களின் சாதியை கேட்கவேண்டியதில்லை. ஏனென்றால் சாதி பெயருடன் கூடவே ஒட்டிக கொண்டிருக்கும். அதுபோல்தான் நரேந்திர தாஸ் தாமோதர்தாஸ் என்ற பெயரோடு அவரது சாதியான மோடியும் சேர்ந்தே பயணிக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் பெயரை விட சாதி பெயரால் தான் அவர் அதிகம் அறியப்படுகிறார்.

மாயாவதி தேர்தல் பிரசாரத்தில் மோடியின் சாதி குறித்து பேசியிருக்கிறார். அவர் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவர் அல்ல என்றும் அரசியலுக்காக தன் சாதியை பிற்பட்ட வகுப்பில் சேர்த்துக்கொண்டார் என்றும் பேசியிருக்கிறார்.

அதுவெல்லாம் முக்கியம் அல்ல. மோடி நாட்டுக்கு என்ன நன்மை செய்தார்? எது அதிகம்? நன்மையா தீமையா என்ற விவாதம்தான் முக்கியம்.

சாதியை ஒழிப்பேன் என்று சொல்லக்கூடியவர் அல்ல நரேந்திர மோடி. பிறகு அவர் எந்த சாதியாக இருந்தால் என்ன?

ஆனால் இந்த விவாதத்தை, தான் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவன் என்று கூறி, தூண்டி விட்டவர் மோடியேதான்.                       

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in இந்திய அரசியல்

To Top