Connect with us

40 திரிணாமுல் எம் எல் ஏக்களை விலை கொடுத்து வாங்கிவிட்டாரா மோடி?!!

modi-mamatha

இந்திய அரசியல்

40 திரிணாமுல் எம் எல் ஏக்களை விலை கொடுத்து வாங்கிவிட்டாரா மோடி?!!

மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 40 சட்ட மன்ற உறுப்பினர்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.

மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 40 சட்ட மன்ற உறுப்பினர்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் பாராளுமன்ற தேர்தல் தீர்ப்பு வந்தவுடன் உங்களை கைவிட்டு விடுவார்கள் என்று பிரதமர் மோடி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மோடி அவர்களை விலை கொடுத்து வாங்கிவிட்டாரா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது அல்லவா? எப்படி அவ்வளவு உறுதியாக கூறுகிறார்?

தான் வெற்றி பெற என்னவேண்டுமானாலும் செய்வார் மோடி என்று இதன் மூலம் மீண்டும் உறுதிபடுத்தி இருக்கிறார் மோடி.

ஒரு பிரதமர் இந்த அளவு தரம் தாழ்ந்து கட்சி தாவலை ஊக்குவிக்கும் வகையில் பேசுவது இதுவரை நடந்திராதது.

வங்க மக்கள் மம்தாவின் மீது வைத்த நம்பிக்கையை அவர் காப்பாற்றவில்லை என்றால் தேர்தலில் மக்கள் தீர்ப்பளிக்க போகிறார்கள்.

ஆனால் திரிணாமுல் எம் எல் ஏக்கள் தன்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்று சொல்லும் பிரதமர் அவர்களிடம் என்ன சொல்லி இருக்க வேண்டும்? அதிருப்தி  இருந்தால் கட்சியை விட்டு உடனே வெளியேறுங்கள் என்றுதானே சொல்லி இருக்க வேண்டும். அதை விடுத்து தேர்தல் முடிவுக்குப் பின்னர் வெளியே வருவார்கள் என்றால் அவர்கள் தேர்தல் முடிவு மம்தாவிற்கு சாதகமாக இருந்தால் வெளியே வர மாட்டார்கள் என்றுதானே அர்த்தம்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் திருட்டுத்தனமாக தொடர்பில் இருக்கிறேன் என்று சொல்வதே ஒரு பிரதமருக்கு அழகா?

தனது தரத்தை நாளுக்கு நாள் மோடி தரம் தாழ்த்திக்கொண்டே போகிறார்.

தேர்தல் கமிஷனில் மமதா கட்சியினர் புகார் கொடுக்க இருக்கிறார்கள். மோடியை மிஞ்சியா தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கும்?

இந்திய அரசியலை அசிங்கப்படுத்தி வருகிறார் மோடி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in இந்திய அரசியல்

To Top