Connect with us

சோடா பாட்டில் வீசவும் கல் எறியவும் எங்களால் முடியும் ; சடகோப ராமானுஜ ஜீயர் பேச்சு ??!!

தமிழக அரசியல்

சோடா பாட்டில் வீசவும் கல் எறியவும் எங்களால் முடியும் ; சடகோப ராமானுஜ ஜீயர் பேச்சு ??!!

ஆச்சரியமாக இருக்கிறதா?

ஸ்ரீ வில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் வைரமுத்து மன்னிப்பு கேட்க பிப்ருவரி மூன்றாம் தேதி கெடு வைத்திருக்கிறார்.

இல்லையென்றால் உண்ணாவிரத போராட்டம் இருப்பேன் என்றும் மிரட்டி இருக்கிறார்.

அப்படி பேசும்போதுதான் இறை நம்பிக்கைக்கு எதிராக யாராவது பேசினால் எங்களால் சோடா பாட்டில் வீசவும் கல் எறியவும் முடியும் என்று பேசியிருக்கிறார்.   அதாவது நாத்திகம் பேசுவதே குற்றம் என்பது அவரது தெளிவான கருத்து.

இந்த திமிர் அவருக்கு எப்படி  வந்தது.?

தமிழர்கள் கொடுத்த இடம்.     தமிழர்களுக்கு எதிராக தமிழர்களையே தூண்டி விட அவர்களால் முடிகிறது.

இன்று மத்தியில் அவர்களது ஆட்சி.    மானிலத்தில் அவர்களுக்கு அடங்கிய ஆட்சி.    எனவே என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று துணித்து விட்டார்கள்.

அதே கெடு வைத்து திராவிடர்  கழக தலைவர் கி . வீரமணி  விஜயேந்திரர் மன்னிப்பு கேட்காவிட்டால் சங்கர மடங்களை முற்றுகை  இடுவோம் என்று எச்சரித்திருக்கிறார்.

இது எங்கே கொண்டு போய் விடும் என்று தெரியவில்லை.

ஒன்று மட்டும் தெரிகிறது.   பார்ப்பானுக்கு ஆட்சி அதிகாரம் கையில் கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வான் .

வைரமுத்து பிரச்னை நீதிமன்றத்தில் இருக்கிறது.    நீதிபதியே வைரமுத்து ஒரு கருத்தை மேற்கொள் காட்டியதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்டிருக்கிறார்.

தவறு என்று நீதிமன்றமே சொல்லாத போது .

செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று  கோரும் சடகோப ராமானுஜ ஜீயரை கைது செய்ய வேண்டும் .   அவர் மீது சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விதம் நடந்து கொண்டதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையில் நியாயம் இருக்கிறதா இல்லையா?

விஜயேந்திரர் தமிழ்த்தாய் அவமதிப்பு செய்ததை எந்த பார்ப்பானும் தவறு என்று சொல்லவில்லை.

ஏதாவது சொல்லி நியாயப் படுத்தவே பார்க்கிறார்கள்.    கமல் உள்பட.

இன்னிலையில் ஒரு மடத்தின் பொறுப்பில் இருப்பவர் இப்படி வன்முறையை தூண்டும் விதமாக சோடா பாட்டில் வீசுவோம் என்று பேசுவது கேவலத்திலும் கேவலம்.

அந்தப் பொறுப்பில் இருக்க அவருக்கு தகுதி  இருக்கிறதா என்பதை அதிகாரிகள் ஆராய வேண்டும்.

உடனடியாக ஜீயர் மீது காவல் துறை தக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in தமிழக அரசியல்

To Top