Connect with us

இலங்கையின் அடாவடிச்சட்டமும் இந்தியாவின் கள்ள மௌனமும் ??!!

India Srilanka

இந்திய அரசியல்

இலங்கையின் அடாவடிச்சட்டமும் இந்தியாவின் கள்ள மௌனமும் ??!!

தமிழ் மீனவன் எவனும் இனி மீன் பிடிக்கக் கூடாது என்று இலங்கை முடிவெடுத்து விட்டது.

இந்தியாவும் அதற்கு ஒப்புதல் அளித்து விட்டது போல்தான் தோன்றுகிறது.

ஆம்.   இலங்கையின் புதிய சட்டப் படி கடல் எல்லையை தாண்டி மீன் பிடிக்கும் தமிழ் மீனவர்களுக்கு ஐம்பது லட்சம் முதல் ஏழரை கோடி வரை அபராதம் விதிக்கும் வகையில் கடுமையான வகையில்  தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப் பட்டிருக்கிறது.

Sri lanka Fisheries and Aquatic Resources Act 1960   – Fisheries ( regulation of Foreign Fishing Tawlers ) Act  dated 24.01.2018  ன் படி இனி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப் படும் தமிழ் மீனவர்கள் இனி ஐம்பது லட்சம் முதல் ஏழரை கோடி வரை அபராதம் செலுத்தி விட்டுத்தான் வர முடியும் என்ற சட்டம் இயற்றப்பட்டு விட்டது.     இது பற்றி இந்திய அரசு மௌனம் சாதிக்கிறது.    இது இலங்கை அரசு மட்டும் முடிவெடுக்கக் கூடிய பிரச்னையா?

கடல் எல்லை நிர்ணயம் கச்சதீவை தாரை வார்க்கப் பட்டபின் தமிழ் மீனவர்களுக்கு எதிராக இருக்கிறது.

தாரை வார்த்தது நியாயமா சட்டப்படி சரியா என்பது உச்ச நீதி மன்றத்தில்  இருக்கிறது.   ஆனால் எந்த தீர்வும் கிடைக்குமா என்பது ஐயமே?

இந்நிலையில் ஒரு கேள்விதான் மிச்சமிருக்கிறது.

தாரை வார்த்தபோதுதான் தமிழகத்தை கேட்கவில்லை.

அப்போது பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமல் செய்யப் பட்ட தாரை வார்த்தல் செல்லுமா செல்லாதா என்பது  இருக்கட்டும்.  பெருபாரி வழக்கில் அந்த இடத்தை வங்காள தேசத்துக்கு தாரை வார்த்தது செல்லாது என்ற உச்ச நீதி மன்ற தீர்ப்பு கச்சதீவுக்கும் செல்லுமா செல்லாதா என்பதை உச்சநீதி மன்றம் தான் சொல்ல வேண்டும்.

அதற்கு பிறகு இரண்டு நாட்டு வெளி உறவு செயலாளர்களுக்கு இடையே செய்யப்  பட்ட ஒப்பந்தம் செல்லுமா செல்லாதா என்பதுதான் இப்போதைய கேள்வி.

அதன் படி தமிழ் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை இரு நாட்டு அரசுகளாலும் பாது காக்கப் படும் என்று செய்து கொண்ட ஒப்பந்தம் என்னவாயிற்று?

அந்த ஒப்பந்தத்தை இரு நாட்டு அரசுகளும் அமுல் படுத்துவதில்  உறுதியாக  இருந்தாலே  கச்சத்தீவு பிரச்னை எழவே வாய்ப்பு இல்லை.

உரிமைகள் பறிக்கப் படும்போது கடிதம் எழுதும் உரிமை மட்டுமே தான் நமக்கு  இருக்கிறது என்பது அவமானம்.   அதைவிட அவமானம் தமிழ் நாட்டு மீனவர்கள் இந்திய மீனவர்கள் என்பதை  இந்திய அரசு அங்கீகரிக்க வில்லை என்பதுதான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in இந்திய அரசியல்

To Top