Connect with us

சிபிஐ இயக்குனர் கட்டாய விடுப்பை ரத்து செய்து மோடி அரசின் முகத்திரை கிழித்த உச்சநீதிமன்றம் !!!

modi-court

சட்டம்

சிபிஐ இயக்குனர் கட்டாய விடுப்பை ரத்து செய்து மோடி அரசின் முகத்திரை கிழித்த உச்சநீதிமன்றம் !!!

மோடி அரசின் முகத்திரை கிழித்த உச்சநீதிமன்றம்

நியாயமான விசாரணை வேண்டுமா கூப்பிடுங்கள் சிபிஐ என்று ஒரு காலத்தில் நம்பிக்கை இருந்தது.

அத்தனையும் மோடி காலத்தில் காலாவதியாகி விட்டது.

இப்போது மோடி எதை செய்தாலும் அது அவருக்கு கரும்புள்ளியாகவே அமைகிறது.

அவர் காலத்தில்தான் இரண்டு மூத்த சிபிஐ அதிகாரிகள் பரஸ்பரம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டு இவர்களை நம்பியா நாடு இருக்கிறது என்ற இழிநிலையை உருவாக்கினார்கள்.

இப்போதும் கூட உச்சநீதிமன்றம் அலோக் வர்மாவின் கட்டாய விடுப்பை ரத்து செய்திருக்கும் நிலையில் அவரது பதவிக்காலம் இந்த மாதம் 31 ம தேதி முடிவுக்கு வந்தபின் அடுத்து என்னவாகும் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

பிரதமரும் எதிர்கட்சிதலைவரும்தலைமை நீதிபதியும் இணைந்து இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பார்கள் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு நடைமுறைக்கு வரும் என்று தோன்றவில்லை.

அதுவும் இடைக்கால ஏற்பாடாக மோடி நியமித்த இயக்குனர் உபி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மீது புதிய குற்றச்சாட்டுகளை கூறி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பது அரசியல் நோக்கம் கொண்டது என்பது எல்லாருக்கும் தெரிந்து விட்டது. ஆக தனது அரசியல் எதிரிகளை பலவேனப்படுத்த மோடி என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பது சிபிஐ கையாளப்பட்ட விதமே சான்று கூறுகிறது.

மோடிதான் யோக்கியர் என்ற பிம்பம் உடைபட்டு விட்டது.

நீதிபதிகளே விசாரணை கூண்டில் நின்றால் குற்றவாளிகளுக்கு கொண்டாட்டம்தான்.   அது தான் சிபிஐ விடயத்தில் நடந்திருகிறது.

பங்கப் பட்டிருப்பது சிபிஐ மட்டுமல்ல, மோடியின் மதிப்பும்தான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in சட்டம்

To Top