Connect with us

சபரிமலை; பெண்களும் பஞ்சமர்களும் அசுத்தமானவர்கள் எனவே தரிசனம் செய்ய முடியாது என்கிறது தந்திரியின் நூல் ??!!

sabarimalai

மதம்

சபரிமலை; பெண்களும் பஞ்சமர்களும் அசுத்தமானவர்கள் எனவே தரிசனம் செய்ய முடியாது என்கிறது தந்திரியின் நூல் ??!!

அனைத்து வயது பெண்களும் அய்யப்பனை தரிசிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் 49 சீராய்வு மனுக்கள் விசாரணைக்கு வந்து அது எதிர்வரும் ஜனவரி மாதம் 22-ம் தேதிக்கு விசாரணைக்கு மாற்றப் பட்டிருக்கிறது.

உச்சநீதிமன்றம் எல்லா வயது பெண்களையும் அனுமதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.

அதனால் வருகிற மகர சங்கராந்தி வரை எல்லா வயது பெண்களும் அய்யப்பனை தரிசிக்கலாம் என்பதுதான் இப்போதைய நிலை.

இதுவரை ஏறத்தாழ அறுநூறு பெண்கள் அய்யப்பனை தரிசிக்க பதிவு செய்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பத்து  முதல் ஐம்பது வயது வரையில் ஆன பெண்கள். அவர்களுக்கு அரசு போதிய பாதுகாப்பு கொடுத்து தரிசனம் செய்ய வைக்க வேண்டும்.

அரசு என்ன செய்யப் போகிறது அரசை பணிய வைக்க சங்க பரிவாரம் என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இடையில் உச்சநீதி மன்ற விசாரணையின் போது கோவில் தந்திரிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வாக்குமூலத்தில் சொல்லப் பட்ட விபரங்கள் அதிர்ச்சியானவை. சென்னஸ் நாராயணன் நம்பூதிபாத் எழுதிய கேரள தந்திர சமுசாயம்  பகுதி 10, வரி IIள் சொல்லப் பட்டதை அதில் குறிப்பிட்டிருந்தார்கள்.

அதில் மாதவிலக்கு என்பது அசுத்தமானது. அந்த காலத்தில் பெண்கள் கோவிலுக்கு வரமாட்டார்கள் எந்த மதம் சார்ந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று சொல்லப்பட்டிருந்தது

அது மட்டுமல்ல அடுத்த வரியில் சொல்லப் பட்டிருந்ததுதான் முக்கியம். அதாவது’   ‘ கோவிலுக்குள் கீழ்சாதி மக்கள் அதாவது சூத்திரர்களுக்கு கீழே உள்ள பஞ்சமர்கள் கூட நுழைவது கூட அசுத்தமானதுதான் ‘.

ஆனால் இந்த விதி இப்போது கடைப்பிடிக்கப் படுவது இல்லை. காலப் போக்கில் இது மறைந்து விட்டது என்றால் பெண்கள் நுழைந்தால் அசுத்தம் என்ற விதியும் காலப் போக்கில் மறைய வேண்டியதுதானே.

கீழ்சாதி மக்கள் கோவிலுக்கு வருவது கோவிலை அசுத்தம் செய்வதாகும் என்ற விதியை எப்படி தைரியமாக உச்சநீதி மன்றத்தில் வாக்குமூலமாக தாக்கல் செய்தார்கள்?

இந்த லட்சணத்தில் தலித் மக்களை எப்படி ஈர்ப்பது என்று சங்க பரிவாரங்கள் திட்டம் தீட்டி வருகிறார்கள்.

அந்த நூல் கோவிலை எப்படி சுத்தி செய்வது என்றும் சொல்கிறது. அதாவது அப்படி ஏதாவது அசுத்தம் ஏற்பட்டு விட்டால் என்ன செய்ய வேண்டும்?

ஒரு சுத்திகரிப்பு; பிராமண பாத தீர்த்தம் – அதாவது பிராமணன் கால் கழுவும் தண்ணீரை தெளிப்பது. மற்றொன்று பிராமணனுக்கு உணவளித்து அவன் சாப்பிட்ட மிச்சத்தை அசுத்தம் பட்ட இடத்தில் வைப்பது.

ஏமாந்தால் இதையும் செய்ய பார்ப்பான் செய்ய தயாராகவே இருப்பான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in மதம்

To Top