Connect with us

தொண்டமான் பெயர் நீக்கம் சிங்களர்களிடம் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதன் அடையாளம்??!!

Latest News

தொண்டமான் பெயர் நீக்கம் சிங்களர்களிடம் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதன் அடையாளம்??!!

இலங்கையில் உள்ள தொண்டைமான் தொழிற்பயிற்சி மையம் , தொண்டமான் கலாச்சார மையம்  , தொண்டைமான் மைதானம் போன்ற அரசு நிறுவனங்களின் பெயர்களில் இருந்து சவுமிய மூர்த்தி தொண்டைமான் பெயரை சிங்கள அரசு நீக்கியிருக்கிறது.

தமிழக அரசியல் தலைவர்கள் ஸ்டாலின் வைகோ, திருமாவளவன்  அன்புமணி  போன்ற பலரும் கண்டித்திருக்கிறார்கள்.

சிலோன் இந்திய காங்கிரஸ் கட்சியை துவக்கி மலையக தமிழர்களின் உரிமைகளுக்கு தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட சவுமிய மூர்த்தி தொண்டமானின் பங்களிப்புக்காக அவரது பெயரை சூட்டிய சிங்கள அரசு இப்போது மனம் மாறி அவரது பெயரை நீக்க வேண்டிய அவசியம் என்ன.?    அதுவும் சிறிசேன தமிழர்களின் ஆதரவை பெற்று ஆட்சிக்கு வந்தவர்.

ஆட்சிக்கு வந்தவுடன் எல்லா சிங்கள அரசியல்வாதிகளும் தமிழர்களை ஒடுக்குவதில் ஒன்றுபட்டு விடுவார்கள்.

இதைத்தான் தான் ஏன் ஆயுத போராளியாக மாறினேன் என்பதற்கு காரணமாக மேதகு பிரபாகரன் கூறி வந்தார்.

எல்லா ஒப்பந்தங்களையும் காலடியில் போட்டு மிதித்தவர்கள் ஆயிற்றே?

இன்றைக்கு மீண்டும் ஜனநாயக வழியில்  போராடி தங்கள் உரிமைகளை மீட்டு எடுப்பது என்ற முடிவிற்கு எல்லா தமிழ் அமைப்புகளும் வந்து விட்டன.

ஆனால் எந்த சூழ்நிலையிலும் நாங்கள் மாற மாட்டோம் என்று சிங்களர்கள் அவ்வப்போது காட்டி கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் இந்திய அரசு தலையிட்டு சிங்கள அரசின் இந்த முடிவை மாற்ற வேண்டும் என்று  கோரிக்கை விடும் தமிழக தலைவர்கள் இன்னமும் இந்திய அரசை நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.

நமக்கு வேறு வழி இல்லை என்பதும் உண்மைதானே?

என்று உணரும் அகில உலகம் என்று காத்திருக்க வேண்டியதுதான்!!!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top