Connect with us

ராகுல் இனி காங்கிரஸ் தலைவர் இல்லை!! பிரதமர் வேட்பாளரும் இல்லையா??!!

Rahul-Gandhi

இந்திய அரசியல்

ராகுல் இனி காங்கிரஸ் தலைவர் இல்லை!! பிரதமர் வேட்பாளரும் இல்லையா??!!

நான் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகி விட்டேன். இனி புதிய தலைவரை தேர்ந்துஎடுப்பது கட்சியின் கடமை என்று அறிவித்திருக்கிறார் ராகுல் காந்தி.

தனி ஒருவனாக நின்று போராடியதாவும் சொல்வதைத்தான் ஏற்க முடியவில்லை. வேறு காங்கிரஸ் தலைவர்களே இல்லையா என்ற கேள்வி எழுகிறது.

சரி. இப்போது தலைவர் இல்லை. நாளை பிரதமர் வேட்பாளராக போட்டியிடமாட்டரா என்ற கேள்வியும் எழுகிறது.

அதிகாரத்தில் இருக்கும்போது பதவிவிலகுவதுதான் பெருமை சேர்க்கும். அதிகாரம் இழந்த போது பதவி விலகுவதில் என்ன பெருமை?

நேரு குடும்பத்தை விட்டால் தலைமை தாங்க வேறு தலைவர்களே இல்லை என்பது ஒரு தேசியக்கட்சிக்கு இழுக்குத்தான்.

ஏன் அப்படி ஒரு தலைவர் தோன்றவில்லை.? ஏன் என்றால் அது காங்கிரஸ்!

பாஜகவில் அந்த நிலை ஒரு போதும் எழாது. ஏன் என்றால் அது ஒரு மதவாத கட்சி.    அதுவும் சாதியம் ஆட்சி செய்யும் மதவாதம். அதுவும் பார்ப்பனீயம் தனக்கொரு நீதி மற்றவர்க்கு ஒரு நீதி என்பதை எல்லாரையும் ஏற்றுக் கொள்ள வைக்கும் மதவாதம்.    அங்கு தலைவர்கள் முக்கியம் இல்லை. இன்று மோடி. நாளை ஒரு கட்கரி. இவர்களை எல்லாம் இயக்கும் ஆர்எஸ்எஸ் தன்னை  முன்னிலைப்படுத்தியதே இல்லை. ஆனால் அவர்கள் தீர்மானிக்கும் சக்தியாக என்றுமே நிலைப்பார்கள்.

மேலாகப் பார்க்கும்போது ராகுல் செய்வது நல்லது போல்தான் தோன்றும்.

நேரு குடும்பத்தை விட்டு வேறு ஒருவர் காங்கிரசின் தலைவராக மிளிர வேண்டிய வாய்ப்பை ராஜீவ் காந்தி கெடுத்தார். வி பி சிங்கிற்கு அந்த வாய்ப்பை கொடுத்திருக்கலாம். ஆனால் போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு அந்த வாய்ப்பை கொடுக்க தகுந்த தருணமாக அமையவில்லை.

மாநில உரிமைகளை மதிக்கும் தேசிய கட்சியாக காங்கிரஸ் இருப்பதால் அது வலுப் பெற அவசியம் இருக்கிறது.

மாற்றாக ஒரு இளைஞரை நியமிக்க வேண்டும். வயதானவரை பெயருக்கு போட்டால் எந்த மாறுதலும் விளையப்போவதில்லை.

காங்கிரசில் மாற்றங்கள் வரவேற்கப் பட வேண்டியவையே.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in இந்திய அரசியல்

To Top