Connect with us

மீண்டும் முத்தலாக் தடை சட்ட மசோதா; இவர்களுக்கு வேறு வேலையே கிடையாதா??!!

muthalak-plan

மதம்

மீண்டும் முத்தலாக் தடை சட்ட மசோதா; இவர்களுக்கு வேறு வேலையே கிடையாதா??!!

முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் வழக்கம் சட்டப்படி செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்லி விட்டது.

ஆனால் அப்படி முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் முஸ்லிம்களுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை தரும் பாஜக வின் சட்டத்தை தான் எல்லாரும் எதிர்க்கிறார்கள்.

இது முஸ்லிம் பெண்கள் மீதான அக்கரையில் செய்யும் நடவடிக்கை அல்ல.    இஸ்லாத்தின் சட்டத்தின் மீது கை வைக்க வேண்டும். அவர்களை அச்சத்தில் ஆழத்த வேண்டும். இதுதான் பாஜக அரசின் திட்டமா?

இது நாட்டுக்கு நல்லதா? இந்து திருமண சட்டப்படி மனைவிகளை கைவிடும் கணவர்களுக்கு ஓராண்டு சிறை என்று இருக்கும்போது முஸ்லிம்களுக்கு மட்டும் ஏன் மூன்றாண்டு சிறை என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த சட்டம் ராஜ்ய சபையில் முன்பு  நிறைவேறாமல் காலாவதி ஆனபடியால் இப்போது மீண்டும் அதே சட்டத்தை தாக்கல் செய்திருக்கிறார்கள்.

இதைத்தவிர இவர்களுக்கு சிந்திக்க செயல்பட வேறு பிரச்னைகளே இல்லையா ?

ஒரு சிவில் பிரச்னையை கிரிமினல் ஆக்கும் வேண்டாத வேலை!!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in மதம்

To Top