Connect with us

அஞ்சல் துறையில் இனி வடவர்களுக்கே வேலை?! தொடரும் வஞ்சகம்?!!

post-office-exam

மொழி

அஞ்சல் துறையில் இனி வடவர்களுக்கே வேலை?! தொடரும் வஞ்சகம்?!!

இன்று நடைபெறும் அஞ்சல் துறை கிளை போஸ்ட் மாஸ்டர், உதவிகிளை போஸ்ட் மாஸ்டர், தபால் டெலிவரி செய்பவர்கள் போன்ற பல் வேறு பணிகளுக்கு நடைபெறும் தேர்வில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே கேள்விகள் இருக்கும் என அதிர்ச்சி தகவலை ஒருநாள் முன்னதாக அறிவித்து எல்லாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது அஞ்சல் துறை.

இதுவரை எல்லா மொழிகளிலும் கேட்கப்பட்டு வந்த கேள்விகள் ஏன் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு யார் பதில் சொல்வது?

உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை தேர்வுகளை நடத்தி கொள்ளுங்கள் ஆனால் முடிவுகளை மட்டும் வெளியிடாதீர்கள் என்று உத்தரவிட்டு இருக்கிறது.

இந்த அநியாயத்தை யார் கேட்பது?

நாங்கள் செய்து கொண்டே இருப்போம். விழித்துக் கொண்டால் இல்லை என்போம்.  மீண்டும் சீண்டுவோம். விழித்தால் மீண்டும் மறுப்போம் என்று தொடர்ந்து கொண்டே  இருக்கும் இந்த நாடகத்துக்கு முடிவு ஏது?

இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே நடத்தினால் பிரச்னை வரும் என்று தெரியாமலா இந்த முடிவை எடுத்திருப்பார்கள்? அடிப்படை அறிவு இல்லாத எவரும் இந்த முடிவை எடுத்திருக்க முடியாது. எனவே தெரிந்தே தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.

ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே தேர்வு நடத்தி அதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இத்தனை பேர் தேர்ந்து  எடுக்கப்பட்டு அவர்கள் வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு அனுப்பபட இருக்கிறார்கள். அது நல்ல முன்னேற்றம் இல்லையா என்பார்கள்? பிறகு ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே தேர்வு என்பது நிலைப் பட்டு விடுமல்லவா?

ஏனப்பா இந்த வேலையை ஏன் வேறு மாநிலத்துக்கு சென்று பார்க்க வேண்டும்.   இங்கே காலியாக இருக்கும் இடத்தில் நான் பணி செய்வதில் உனக்கு என்ன பிரச்னை என்ற கேள்விக்கு யார் பதில் சொல்வது?

எல்லாரும் கண்டித்து அறிக்கை விட்டு விட்டார்கள். அதற்கு நீதி மன்றம் சென்று நீதி பெற வேண்டும்.

எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றால் நடப்பது நமது அரசல்ல என்றுதானே ஆகும். ?

தவறுகளை தெரிந்தே அடுக்கிக் கொண்டே போகிறது பாஜக அரசு. இது எங்கு கொண்டு போய்விடுமோ?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in மொழி

To Top