Connect with us

கணவன் தலைவர்- மைத்துனர் இளைஞர் அணித்தலைவர்- இப்போது மனைவி பொருளாளர்; தேமுதிக கதை?

premalatha-vijayakanth-dmdk

தமிழக அரசியல்

கணவன் தலைவர்- மைத்துனர் இளைஞர் அணித்தலைவர்- இப்போது மனைவி பொருளாளர்; தேமுதிக கதை?

விஜயகாந்த் தலைவராக உள்ள தேமுதிக வில் அவரது மைத்துனர் சுதீஷ் இளைஞர் அணித்தலைவர் பொறுப்பில் இருந்து கட்சிப்பணிகளை பார்த்துக் கொண்டாலும் பெயர் அளவுக்கு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பொறுப்பு எதுவும் இல்லாமல் இருந்தார்.

ஆனாலும் எல்லா முடிவுகளையும் அவர்தான் எடுத்தார் என்பது எல்லாருக்கும் தெரியும்.

இன்னும் சொல்லப்போனால் சென்ற தேர்தலில் திமுகவோடு கூட்டு சேர்ந்திருக்க வேண்டிய தேமுதிக வை பிரித்து சென்றதே பிரேமலதாதான் என்ற குற்றசாட்டு இன்னும் இருக்கிறது.

தோற்பதற்காகவே தேர்தலில் நின்ற கட்சி அது. விளைவு திமுக ஆட்சிக்கு வரும் வாய்ப்பை இழந்தது. திட்டம் வெற்றி.

பத்து சதவீதம் ஒட்டு வங்கி வைத்திருந்த கட்சி இரண்டு சத வீத கட்சியாக சுருங்கியதற்கும் பிரேமலதாதான்  காரணம்.

இந்நிலையில் கட்சியின் பொருளாளராக இருந்த டாக்டர் இளங்கோவனை அவைத்தலைவராக ஆக்கி விட்டு அவைத் தலைவராக இருந்த அழகாபுரம் மோகன்ராஜை கொள்கை பரப்பு செயலாளராக அறிவித்து விட்டு மனைவி பிரேமலதாவை கட்சியின் பொருளாளராக அறிவித்து விட்டார் விஜயகாந்த்.

விசேடம் என்னவென்றால் பொறுப்பேற்றவுடன் பிரேமலதா கொடுத்த பேட்டிதான்.

‘குடும்பத்தில் யாரும் கட்சி பொறுப்பிற்கு  வர மாட்டார்கள் என்று கேப்டன் சொன்னாரே என்று கேட்கிறீர்கள். எனக்கு தெரிந்து அப்படி அவர் சொன்னதே இல்லை. அதற்கும் மேல் கேட்டீர்கள் என்றால் நான் பதில் சொல்ல தேவை இல்லை.’

இதுதான் அவர் கொடுத்த பேட்டி. அதற்கு பேசாமல் இது குடும்ப கட்சி நாங்கள் தான் தீர்மானிப்போம். மற்றவர்கள் கேள்வி கேட்க உரிமை இல்லை என்று சொல்லி இருந்தால் அது மரியாதை யாக இருந்திருக்கும்.

இப்படிப் பட்ட கட்சிகளில் இன்னமும் உறுப்பினர்களாக இருப்பவர்கள் கொஞ்சமாவது சிந்தித்தால் நல்லது.

கட்சிகளுக்கா பஞ்சம். கொஞ்சமாவது உங்களுக்கு பிடித்த  கொள்கை உள்ள கட்சி ஏதாவது ஒன்றில் சேர்ந்து தமிழகத்தை காப்பாற்றுங்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in தமிழக அரசியல்

To Top