Connect with us

சாதி ஆணவக் கொலைகள் மிகப் பெரிய சமுதாய சீர்திருத்த சவால்?!

honor-killingin-coimbatore

மதம்

சாதி ஆணவக் கொலைகள் மிகப் பெரிய சமுதாய சீர்திருத்த சவால்?!

உடுமலை சங்கர்- ஓமலூர் கோகுல் ராஜ் கொலைகள் சாதி ஆணவக் கொலைகள் என்பது உறுதிப்படுத்தப்பட்ட உண்மை.

ஆனால் அவைகள் சமுதாயத்தில் சின்ன அதிருப்தி அலைகளை மட்டுமே உருவாக்கி விட்டு மறைந்துவிட்டன.

எந்த விழிப்புணர்வுகள் இவற்றை ஒழிக்க முடியுமா அது மலர்ந்ததா? இல்லை என்பதே பதில்.

ஆனால் கோவையில் ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை விரும்பிய குற்றத்திற்காக ஒரு அண்ணன் தன் தம்பியையே வெட்டிக் கொன்றதுதான். தம்பியின் மனைவியும் அவனது கொலைவெறித் தாக்குதலில் உயிர் இழந்துவிட்டார்.

உருளைக் கிழங்கு மண்டியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் குடும்பங்கள்  தங்களை துப்புரவுத் தொழிலாளிகளை விட மேல் சாதி மக்களாக மனோபாவம் கொண்டிருந்ததுதான் பிரச்னை.

சாதிவெறி அடித்தட்டு மக்களிடம் அதிகம் இருப்பதுதான் வேடிக்கை. இந்த கொடுமையை எப்படி ஒழிப்பது? விழிப்புணர்வை எப்படி கொண்டு வருவது? சட்டம் ஒன்றே இவர்களை திருத்தும். ஆம். சொன்னால் கேட்க மாட்டார்கள். சட்டம் சொன்னால் கேட்பார்கள். சில நியாயங்கள் தடி கொண்டுதான் சொல்லப்பட வேண்டும்.

அதற்கான முயற்சிக்கு பாராளுமன்றத்தில் திருமாவளவன் பேசி அடித்தளம் போட்டிருக்கிறார். அரசுகள் முன் முயற்சி எடுக்க வேண்டும். அதிமுக அரசு  எடுக்குமா?

அதிமுக அரசு நடுத்தர மேல்சாதி மக்களை நம்பி இருக்கிற கட்சி.

சாதி ஆதிக்கத்தை எதிர்க்கும் சக்தி அதற்கு ஏது?

மத்தியிலோ மத ஆதிக்க ஆட்சி.

மதம் சாதிகளின் பிறப்பிடம். எப்படி ஒழியும் சாதி வெறி?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in மதம்

To Top