Connect with us

பயமுறுத்தும் டெங்கு; ஊசலாட்டத்தில் ஆட்சியாளர்கள்; ஆபத்தில் பொது மக்கள்?

தமிழக அரசியல்

பயமுறுத்தும் டெங்கு; ஊசலாட்டத்தில் ஆட்சியாளர்கள்; ஆபத்தில் பொது மக்கள்?

பெயருக்குத்தான் மே 16 உலக டெங்கு விழிப்புணர்வு தினம். இப்போது வருடம் முழுவதும் டெங்கு தாக்கும் அபாயம் அதிகரித்திருக்கிறது. முன்பெல்லாம் அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை டெங்கு பரவும் ஆபத்து என்று பிரச்சாரம் செயப்  பட்டு வந்தது. அதுதான் இப்போது மாறியிருக்கிறது. டெங்கு விற்கு என்று குறிப்பிட்ட மருந்து என்று எதுவும் இல்லை. வரும் முன் காப்போம் என்பது மட்டுமே டெங்குவிற்கு மருந்து.

இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் டெங்கு காய்ச்சல் பரவி இருக்கிறது.

காய்ச்சல் வந்தவுடன் இது டெங்கு தான் என்று அறிவிக்க ரத்த பரிசோதனை செய்தால் மட்டுமே முடியும். அதுவும் உறுதி ஆனால் சிகிச்சை என்பது சுற்றுவட்டப்  பாதைதான். அதாவது அதற்கென்று மருந்தில்லா விட்டாலும் அதிக அளவு நீர்சத்து பானத்தை பருக செய்து சத்து உணவு கொடுத்து ரத்தத்தில் தட்டணு எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது மட்டுமே சிகிச்சை.

சிலர் ஓரிரண்டு நாட்களில் இறந்து விட்டால் அது அவர்கள் தலைஎழுத்து. இப்படித்தான் போய்கொண்டிருகிறது டெங்கு சிகிச்சை இந்தியாவில். கொசு உற்பத்தி நடக்காமல் செய்வது ஒன்றே முழுமையான நடவடிக்கை. யார் செய்வது? கொசு உற்பத்தி ஆக தேவைப்படும் ஏழு நாட்கள் எங்கும் தண்ணீர் தேங்கி நிற்காமல் செய்ய யார் உறுதி செய்ய முடியும்?

சென்ற ஆண்டு 22000 பேர் காய்ச்சல் என்று வந்தார்கள் என்றும் இந்த ஆண்டு இதுவரை   2100   பேர் மட்டுமே வந்திருக்கிறார்கள் என்றும் பெருமை பேசும் மாநில அரசு இனி வரும் மாதங்களில் எத்தனை பேர் வருவார்கள்  என்று உறுதி சொல்ல முடியுமா ?

திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியில் ரிஸ்வான் என்ற 13 வயது சிறுவன்  டெங்கு வால் இறந்தான் என்று அறிவித்த அடுத்த நாளே மணலியில் கவிதாசன் என்ற 9 வயது சிறுவனும் காய்ச்சலால் இறந்திருக்கிறான்.  அது டெங்கு என்று சந்தேகம் இருந்தாலும் அரசு, மரணம் எதனால் என்று அறிவிக்க தயங்கி மர்ம மரணம் என்று அறிவிக்கிறது. ஏன் டெங்கு மீது அத்தனை பயம்?

வடகிழக்கு பருவ மழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் என்று தெரிகிறது.  அப்போது கொசு உற்பத்தி அதிகமாகும் என்ற நிலை உள்ளது.

எனவே அதற்கான தடுப்பு நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் இழப்புகளை தவிர்க்க முடியாது. டென்குவோடு பன்றி காய்ச்சலும் சேர்ந்து வருகிறது. எனவே இரட்டை எச்சரிக்கை தேவை.

நகரில் எங்குமே எந்த விதமான குப்பைகளும் சேர விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அங்குதான் கொசு உற்பத்தி ஆகும் ஆபத்து மறைந்திருக்கிறது. நிலவேம்பு கஷாயம் சிறந்த நோய் தடுப்பு சக்தி என்று தெரிந்தும் அதை எல்லாருக்கும் கிடைக்க  செய்ய என நடவடிக்கை?

நிதி ஒதுக்கீடு அறிவிப்பு வருகிறது. அதை கேட்கும் பொதுமக்கள் அறிவிப்பு வந்த தங்கள் பகுதிக்கு ஏன் நிதி வரவில்லை என்று கேட்கிறார்களே?

நிர்வாகம் என்ற ஒன்று தமிழகத்தில் இருக்கிறதா என்பதே தெரியவில்லை.

சென்னையில் 16 பேருக்கு டெங்கு காய்ச்சல் என்று பத்திரிகை செய்தி வருகிறது.  ஆனால் அவர்கள் யார் யார் என்று தகவல் வரவில்லை. எங்கு சென்று விசாரிப்பது?

அரசு இனியாவது விழித்துக் கொள்ளட்டும்.?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in தமிழக அரசியல்

To Top