Connect with us

கச்சதீவுப் பகுதியில் இலங்கை போர்க்கப்பல். யாரை மிரட்டுகிறார்கள் ?

Latest News

கச்சதீவுப் பகுதியில் இலங்கை போர்க்கப்பல். யாரை மிரட்டுகிறார்கள் ?

கச்சதீவுப் பிரச்சினையில் இந்திய அரசின் அணுகுமுறை தமிழர்களுக்கு எதிராகவே இருந்து வருகிறது.
பாராளுமன்ற அனுமதி பெறாமல் கச்சதீவை இலங்கையிடம் ஒப்படைத்ததில் தொடங்கி ஐநுருக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது வரை இந்திய அரசு இதுவரை தமிழ் மீனவர்களை இந்தியர்களாகவே பார்க்கவில்லை.
சோனியா ,ராகுல் அதிகாரத்தில் இருக்கும் வரை இலங்கை அரசு  தமிழர்களை அச்சுறுத்து வதை இந்திய அரசு எந்த விதத்திலும் கண்டு கொள்ளாது என்பதே உண்மை .  
கச்சதீவுப் பிரச்சினை உச்ச நீதி மன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. அங்கே நீதி கிடைத்தால்தான் உண்டு என்பதே நிலைமை.
கச்சத்தீவு மீட்கப் பட்டால்தான் கடல் எல்லை மாறும். தமிழ் மீனவர்களின் மீன்பிடி உரிமை அந்தப் பகுதியில் நிலை நாட்டப் படும். இலங்கை அத்து மீறுவது தடுக்கப் படும்.        
இலங்கை நட்பு நாடு என்று இந்தியா சொல்லி வருகிறது. பிறகு ஏன் போர்க்கப்பலை அனுப்பி மிரட்ட வேண்டும்?  
இலங்கை தன்னை மிரட்டவில்லை என்று இந்தியா நினைக்கிறது.
தமிழர்களை இலங்கை மிரட்டி வைப்பதில் இந்தியாவுக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை.
இப்படி தன் குடி மக்களின் உரிமைகளை விட உணர்வுகளை விட பக்கத்துக்கு நாட்டின் உணர்வுதான் முக்கியம் என்று நினைக்கிற நாடு உலகத்தில் வேறு எங்கும் இருக்கிறதா என்று தெரியவில்லை.
இந்தியாவில் இணைந்திருப்பதில் தமிழர்கள் பெருமைப்பட்டுக் கொள்வதா? வெட்கப் படுவதா?
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top