Connect with us

தாய்க்கு சிலை –தனயனுக்கு கயிறா

Latest News

தாய்க்கு சிலை –தனயனுக்கு கயிறா

எல்லாருக்கும் தொடக்க கல்வி தாய்மொழியில்
தமிழர்களுக்கு மட்டும் ஆங்கிலத்தில் என்றால்
தமிழர்களின் தாய்மொழி ஆங்கிலமாய் மாறுமானால்
தமிழர் என்ற பெயரே நிலைக்காதே
தனித்தியங்கும் தனிச்சிறப்பு இந்திய மொழிகளில்
தமிழுக்கு மட்டுமே என்றால் ,அதை நீடிக்க விடாமல்
எத்தனை சதி ,எத்தனை திட்டங்கள்  எல்லாம் மறைமுகமாக
ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்துக்கும் –ஜெயலலிதாவின்
ஆங்கிலத்தில் தொடக்க கல்வி திட்டத்துக்கும் –நோக்கம்
ஒன்றுதான் –அது தமிழரை அடிமை படுத்துவது – முன்னது
தொழில் வழி பின்னது கல்வி வழி
வசதி படைத்தோருக்கு மட்டுமே கிடைப்பதை 
ஆங்கிலவழி தொடக்க கல்வி முறையை
அனைவருக்கும் கிடைக்க செய்வது எப்படி தவறாகும்
நியாயமான கேள்விதான்- அதனால்தான் சொல்கிறோம்
வேற்று மொழியை தாய்மொழியாக கொண்டோர் தவிர –மற்ற
அனைவர்க்கும் தமிழகத்தில் தொடக்க கல்வி தமிழிலேதான் .
அது எத்தகைய பாடதிட்டமானாலும் சரி
தமிழ்வழிக் கல்வியை குழி தோண்டி புதைத்துவிட்டு
தமிழ்த் தாய்க்கு சிலை வைத்தால் -உலகம் சிரிக்கும்
அறிவற்ற இனம் இவரென்று காரி உமிழும் –எனவே
மாற்ற வேண்டியது தமிழ்நாட்டில் அனைவர்க்கும்
தமிழ் வழி தொடக்க கல்வியே தவிர
ஆங்கிலவழி தொடக்க கல்வியல்ல –தமிழனை
ஆங்கிலேயனாக மாற்றும் முயற்சியை முறியடிப்போம்.
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
+91-91766-46041


Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top