Connect with us

டிசம்பர் ஆறு – ஆர்ப்பாட்டங்களை அனுமதிக்கலாமா ?

Latest News

டிசம்பர் ஆறு – ஆர்ப்பாட்டங்களை அனுமதிக்கலாமா ?

பாபர் மசூதி மீண்டும் கட்ட கோரி முஸ்லிம்
அமைப்புகளும் ராமர் கோயில் கட்ட கோரி இந்து அமைப்புகளும் போராட்டம் நடத்துவது
வழக்கமாகி விட்டது.
உயர் நீதி மன்றத்தில் தீர்ப்பு வந்து பல
ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு நிலுவையில் உள்ள
நிலையில்  இந்து முஸ்லிம் அமைப்புகள்
யாருக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள்?
அரசியல் செய்ய வேண்டும் என்ற நிலையில்
இருப்பவர்களைத் தவிர மற்ற யாருக்கும் இந்த பிரச்சினையில் முன்பு  இருந்த ஆர்வம இப்போது இல்லை.
அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் நிகழ்ச்சிகள்
பின்னுக்குத் தள்ளப்பட்டு இந்த மத வாத போராட்டங்கள் முக்கியத்துவம் பெறுவது
நாட்டுக்கு நல்லதல்ல. 
நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு
பற்றி தெருவில் நின்று சத்தம் போட்டால் நீதி கிடைத்து விடுமா?
அவரவர்க்கு உரிய இடம் எது என்பதில் நீதிமன்றம்
தீர்ப்பு சொன்ன பிறகு அவரவரும் தங்கள் இடத்தில் கோயிலோ தர்காவோ கட்டிக் கொள்வதில்
என்ன ஆட்சேபம் இருக்க முடியும்?
அலஹாபாத் உயர்நீதிமன்றம் மூன்றில் ஒரு பகுதி
மட்டும் முஸ்லிம்களுக்கு சொந்தம் என்றும் மற்ற இரண்டு பகுதிகள் இரண்டு இந்து
அமைப்புகளுக்கு சொந்தம் என்றும் தீர்ப்பு சொல்லி இருக்கும் நிலையில் , தற்போது
ராமர் சிலைக்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதியோடு ஆராதனைகள் செய்யப் பட்டு
வருகின்றன.  உயர் நீதி மன்ற தீர்ப்பில்
மசூதிக்கு முன்னால் பெரிய கோவில் ஒன்று இருந்திருக்க வேண்டும் என்று
சொல்லப்பட்டிருக்கிறது. 
உயர் நீதி மன்ற தீர்ப்பு நிறுத்தி வைக்கப்
பட்டிருக்கிறது.   இறுதி தீர்ப்பு உச்ச
நீதி மன்றத்தில் வர வேண்டும். இப்போதிருக்கும் நிலை நீடிக்க உச்ச நீதி  மன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
எனவே இது தொடர்பாக இரு தரப்பும் எது செய்வதாக
இருந்தாலும் அதை உச்ச நீதி மன்றத்தின் அனுமதியோடு மட்டுமே செய்ய முடியும் . அதை
மட்டுமே இரு தரப்பும் செய்ய வேண்டும்.
மாறாக இன்னமும் மசூதி கட்டுவோம் கோயில்
கட்டுவோம் என்று யார் வெளியே நின்று போராடினாலும் அவர்கள் உச்ச நீதி மன்றத்தை
மதிக்காதவர்கள். கண்டனத்துக்கு உரியவர்கள். தண்டனைக்கு உரியவர்கள்.
வி. வைத்தியலிங்கம் 
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
+91-91766-46041


Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top